by satheesh on | 2026-02-27 03:12 PM
‘இ20’ பெட்ரோல் – மத்திய அரசு புதிய உத்தரவு!
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ ரக பெட்ரோலைக் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் தரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆக்டேன் என்பது பெட்ரோல் அதிக அழுத்தத்திலும் சீராக எரிவதைக் குறிக்கும் அளவீடாகும். பெட்ரோலில் எத்தனால் கலக்கும்போது, என்ஜினுக்குள் எரிபொருள் சீரற்ற முறையில் எரிந்து தேவையற்ற சத்தத்தையும், அதிா்வையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 95 ஆக்டேன் தரம் இந்தச் சிக்கலைத் தடுத்து என்ஜினைப் பாதுகாக்கும். எத்தனால் இயற்கையிலேயே அதிக ஆக்டேன் (சுமாா் 108) கொண்டது. எனவே, எத்தனால் கலப்பு பெட்ரோல் என்ஜினின் வேகம் மற்றும் ஆயுள்காலம் அதிகரிக்கும் என நிபுணா்கள் கூறுகின்றனா்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.
திருமணத்தை மீறிய உறவு - விவகாரத்து கோரி விஜய்யின் மனைவி கோர்ட்டில் மனு தாக்கல் !
எச்சரிக்கை பலகை..! அமைக்கப்பட்ட வேகத்தடை..! தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்..!
பெரியகுளம் அருகே தனியார் பாருக்கு அதிரடி 'சீல்'..! அதிகாரிகள் நடவடிக்கை...!
மோடி புதிய உலக சாதனை !
E- 20 பெட்ரோல் - மத்திய அரசு புதிய உத்தரவு !