by Vignesh Perumal on | 2026-02-23 12:51 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி விழுந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பழைய மதுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். கட்டிடத் தொழிலாளியான இவர், பிழைப்பிற்காக திண்டுக்கல் வந்து தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி, திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள கிரியம்பட்டி பகுதியில் ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணியில் குமார் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கட்டிடத்தின் மாடியிலிருந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்து நடந்த விதம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிடப் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி வேலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த தொழிலாளியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வாக்காளர்களின் சந்தேக தொடர்பு மையம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு...!!!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்....!!!
உடன்பிறப்பாக வாங்க .....! ஷாக் கொடுத்த ஸ்டாலின் ....!! ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ் .....?
கேரளா லாட்டரியில் விழுந்த 20 கோடி பரிசு யாருக்கு ? எனக்குத்தான் வேணும் ! கோர்ட்டில் விசித்திர வழக்கு !!
அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...! தங்கம் விலை புதிய உச்சம்..!