| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

தொகுதி பங்கீட்டு குழு - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு !

by satheesh on | 2026-02-21 07:33 PM

Share:


தொகுதி பங்கீட்டு குழு  - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு !

*தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழு:

கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாகப் பேசி, தொகுதிகளை இறுதி செய்யும் பொறுப்பு தி.மு.க.வின் சீனியர் தலைவர்கள் அடங்கிய இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது._

குழுவின் தலைவர்:

டி.ஆர். பாலு (தி.மு.க. பொருளாளர் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர்)

குழுவின் உறுப்பினர்கள்:

கே.என். நேரு (முதன்மைச் செயலாளர்)

திருச்சி சிவா (நாடாளுமன்றக் குழுத் தலைவர் - மாநிலங்களவை)

ஆ. ராஜா (துணைப் பொதுச்செயலாளர்)

ஆர்.எஸ். பாரதி (செய்தித் தொடர்புச் செயலாளர்)

எ.வ. வேலு (உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர்)

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர்)

முக்கியப் பின்னணி:

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. நாளை (பிப்ரவரி 22) முதல் முறைப்படி கூட்டணிக் கட்சிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு வந்துள்ள நிலையில், இந்தக் குழுவின் பணி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment