| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு - திருப்பூரில் 6 பேர் கைது ! டெல்லி போலீஸ் அதிரடி !!

by satheesh on | 2026-02-21 06:28 PM

Share:


டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு  - திருப்பூரில் 6 பேர் கைது !  டெல்லி போலீஸ் அதிரடி !!

புதுடெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக  தமிழகத்தை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது  தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருப்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தெரிய வந்தது.  அதன்பேரில்,  திருப்பூர் மாவட்டத்தில் இன்று  திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, ஊத்துக்குளி பகுதியில் இருந்து 2 பேரும், பல்லடம் பகுதியில் இருந்து 3 பேரும், திருமுருகன்பூண்டி பகுதியில் இருந்து ஒருவரும் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

இதனிடையே, டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செங்கோட்டைக்கு அருகே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம் ..தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment