by satheesh on | 2026-02-21 06:28 PM
புதுடெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருப்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தெரிய வந்தது. அதன்பேரில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஊத்துக்குளி பகுதியில் இருந்து 2 பேரும், பல்லடம் பகுதியில் இருந்து 3 பேரும், திருமுருகன்பூண்டி பகுதியில் இருந்து ஒருவரும் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
இதனிடையே, டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செங்கோட்டைக்கு அருகே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம் ..தேனி.
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!