by Vignesh Perumal on | 2026-02-15 10:57 AM
சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றான மத்திய கைலாஷ் பகுதியில், ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முறைப்படி திறந்து வைத்தார்.
சென்னை அடையாறு, கிண்டி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் முக்கிய இடமாக மத்திய கைலாஷ் சந்திப்பு விளங்குகிறது. இங்கு நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த மேம்பாலப் பணி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் ரூ.60 கோடியில் 'எல்' (L) வடிவ சர்தார் பட்டேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு (ஐடி காரிடார்) செல்லும் வாகனங்கள், சிக்னலில் காத்திருக்காமல் நேரடியாகச் செல்ல இந்த மேம்பாலம் வழிவகுக்கிறது.
இன்று காலை நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மேம்பாலத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தனது காரிலேயே அந்தப் பாலத்தில் பயணம் செய்து அதன் தரம் மற்றும் செயல்பாட்டை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது மாண்புமிகு அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த புதிய மேம்பாலத் திறப்பினால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாறு பகுதியில் இருந்து ஓ.எம்.ஆர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இனி மத்திய கைலாஷ் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. காலை மற்றும் மாலை நேர அலுவலகப் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். வாகனங்கள் தடையின்றிச் செல்வதால் எரிபொருள் விரயம் தவிர்க்கப்படும்.
மத்திய கைலாஷ் சந்திப்பில் மற்ற திசைகளிலும் நிலவும் நெரிசலைக் குறைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், இதே போன்ற பிற மேம்பாலப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.