by Vignesh Perumal on | 2026-02-15 10:41 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டி செல்லும் சாலையில், குடிநீர் குழாய் உடைந்து பெருமளவிலான தண்ணீர் வீணாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் - வடுகப்பட்டி செல்லும் சாலையில் பங்காளபட்டி பிரிவு அருகே, பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாகப் பயன்படுத்தப்படாமல் சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளதுடன், விலைமதிப்பற்ற குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.
இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கிராமங்களில் 10 நாட்கள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீருக்காக மக்கள் குடங்களை ஏந்திக்கொண்டு நீண்ட தூரம் அலைய வேண்டிய சூழல் உள்ள நிலையில், மறுபுறம் இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாவதைக் கண்டு மக்கள் வேதனையுடன் புலம்பித் தவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "குடிக்க ஒரு சொட்டு தண்ணீருக்கு வழியில்லாமல் தவிக்கும் போது, இப்படி ஆறாக ஓடும் குடிநீரைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது" என ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். குடிநீர் வீணாவதைத் தடுத்து, தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்குச் சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும்.
அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டங்களில் ஈடுபடவும் மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
ஓ.பி.எஸ்-க்கு டி.டி.வி. தினகரன் கடும் எச்சரிக்கை..!
ஓ.பி.எஸ்-க்கு டி.டி.வி. தினகரன் கடும் எச்சரிக்கை..!
அமித்ஷாவை புறக்கணித்தாரா அண்ணாமலை...? பாஜக மேலிடத்துடன் நீடிக்கும் மோதல்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!
அமித்ஷாவை புறக்கணித்தாரா அண்ணாமலை...? பாஜக மேலிடத்துடன் நீடிக்கும் மோதல்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!
கோரவிபத்து..! இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி..! இருவர் படுகாயம்..!