by Vignesh Perumal on | 2026-02-14 01:24 PM
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பயங்கர விபத்தில், முத்தலாபுரம் மற்றும் பூசாரிபட்டியைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த வத்தலகுண்டு சாலையில் முத்தலாபுரம் பிரிவு அருகே இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது, அதே சாலையில் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது, அழகுமலை முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், முனியாண்டி பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் கௌதமன் மற்றும் சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!