by satheesh on | 2026-02-12 08:54 PM
* தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளுக்கு எதிராக
*பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை சீரழிக்கும் முயற்சிக்கு எதிராக
* இன்சூரன்ஸ் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக
* எல் ஐ சி யில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலைகளில் புதிய பணி நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று பெரியகுளம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக பிப்ரவரி- 12 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தோழர் N. நாக பாண்டி (கிளைத் தலைவர்) தலைமை தாங்கினார் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை தோழர் P. சசிகுமார் (கிளைச் செயலாளர்) விளக்கி பேசினார் அதனை தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய தோழர்கள் (தேனி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்) தோழர் P.ராதாகிருஷ்ணன் அவர்களும் அதனை தொடர்ந்து( எல் ஐ சி பென்சனர் சங்கம் சார்பாக) தோழர் பிச்சைமணி அவர்களும் தொடர்ச்சியாக (எல் ஐ சி லியாபி முகவர்கள் சங்கம் சார்பாக தோழர் G.பெருமாள் அவர்களும் (தேனி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் )தோழர் மகேந்திரன் அவர்களும் அதனை தொடர்ந்து (தேனி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் )தோழர் ஆதிநாராயணன் அவர்களும் (தேனி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்) தோழர் அருண் காந்தி அவர்களும் (தமிழ்நாடு கிராம வங்கியின் சங்கம் சார்பாக) தோழர் சாமிதுரை அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியகுளம் எல் ஐ சி அலுவலக ஊழியர்கள் இருபால் முகவ நண்பர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் எல்ஐசி பென்சனர் சங்க தோழர்கள் என 60- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியாக பெரியகுளம் கிளைச் சங்க பொறுப்பாளர் T.P.சரவணகுமார் நன்றி கூறினார்.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!