| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

"வந்தே மாதரம் " கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு !

by satheesh on | 2026-02-12 01:31 PM

Share:


"வந்தே மாதரம் " கட்டாயம்  - அரசு அதிரடி உத்தரவு  !

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம் !

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான *‘ஜன கண மன’* க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும்.  சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் 'வந்தே மாதரம்' இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும். தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ‘வந்தே மாதரம்’ தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடந்த ஆண்டு எழுந்த அரசியல் சர்ச்சையின் பின்னணியில் வெளியாகியுள்ளது.

இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment