by admin on | 2026-02-10 08:34 PM
தேனியில் மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (10.02.2026) 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செய்முறைத் தேர்வு என்பது மாணவர்களின் நடைமுறை அறிவையும், திறமையையும் வெளிப்படுத்தும் முக்கியமான தேர்வு ஆகும். அதனடிப்படையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 02.03.2026 அன்று தொடங்கப்பட உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று (09.02.2026) தொடங்கப்பட்டு, 14.02.2026 வரை நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் செய்முறைத் தேர்வுக்காக 118 மையங்கள் அமைக்கப்பட்டு, 13,500 மாணவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். செய்முறைத் தேர்வினை கண்காணிப்பதற்காக 652 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் ஆய்வுக்கூடம் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளதா எனவும், தேவையான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளனவா என்றும், மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தீயணைப்புக்கருவி (Fire Extinguisher) மற்றும் முதலுதவிப்பெட்டி (First Aid Box) தயார் நிலையில் உள்ளனா என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வெளிப்புற ஆய்வாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்துள்ளார்களா என்றும், மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இவ்வாய்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!