| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

நில மோசடி - ஒருவர் கைது - போலீஸ் அதிரடி !

by satheesh on | 2026-02-07 10:59 AM

Share:


நில மோசடி  - ஒருவர் கைது  - போலீஸ் அதிரடி  !

 விவசாயிடம் ரூ.35.99 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் பிரமுகர் கைது ;


திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வாகரையை சேர்ந்த முருகசாமி(75) இவரின் உறவினரான திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் ரங்கசாமி மகன் பிரபு(42) என்பவர் கோவை, இடிகரை கிராமத்தில் 15.7 சென்ட் இடத்தை ரூ.87 லட்சத்திற்கு விலை பேசி முன் பணமாக ரூ.60.98 லட்சத்தை பெற்று கொண்டு மீதி பணத்தைப் பெற்று கொண்டு கிரையம் எழுதித் தருவதாக கூறி 3 ஆண்டுகளாக நிலத்தை எழுதி கொடுக்காமல் அலைகழித்ததால் முருகசாமி, பணத்தை திருப்பி கேட்டாா் இதையடுத்து, ரூ.25 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்த பிரபு, எஞ்சிய ரூ.35.98 லட்சத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக முருகசாமி மாவட்ட S.P.பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


இணை ஆசிரியர்  :N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment