| | | | | | | | | | | | | | | | | | |
மருத்துவம் காய்ச்சல்

பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !

by satheesh on | 2026-02-06 02:25 PM

Share:


பறவை காய்ச்சல் எதிரொலி  - காகங்கள் இறப்பு  -அரசு எச்சரிக்கை  - பொதுமக்களே உஷார்  !

பறவைக் காய்ச்சல் பரவல் -  தமிழக அரசு எச்சரிக்கை :

உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது. ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது. தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.

காகங்கள் இறப்பு - பொதுமக்களே உஷார்  ;      சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களில், பறவைக் காய்ச்சலுக்கான H5N1 வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், பண்ணை உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளது. காகங்கள், கோழிகள், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அதனை மனிதர்கள் வெறும் கையினால் தொட வேண்டாம்.  8 -10 அடி ஆழத்தில் அதனை புதைக்க வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும்.  உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  சென்னையில் பொதுமக்களுக்கு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.

இணை ஆசிரியர்  ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment