| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!

by Vignesh Perumal on | 2026-01-27 02:09 PM

Share:


அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!

கடந்த முறை திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை வழங்கிய நோட்டீசை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், ஐ. பெரியசாமி வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில், அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2.35 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கருதிஅமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக விசாரணையைத் தொடங்கியது.இந்த விசாரணை தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அமலாக்கத்துறை அனுப்பிய இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ஐ. பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. "ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நோட்டீஸ் சட்டப்படி செல்லாது" என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மனுவில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவோ அல்லது கூடுதல் ஆவணங்களைக் கோரவோ வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் சிலர் மத்திய விசாரணை அமைப்புகளின் பிடியில் உள்ள நிலையில், ஐ. பெரியசாமிக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சட்டச் சிக்கல் திமுக அரசுக்கு மேலும் ஒரு நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment