by Vignesh Perumal on | 2026-01-27 01:13 PM
வழக்கமாகச் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், இன்று திண்டுக்கல்லில் விதிகளைப் பின்பற்றியவர்களுக்கு இனிப்புகளையும், வாழ்த்து அட்டைகளையும் வழங்கி அசத்தியுள்ளனர். திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் துறை மற்றும் தனியார் அமைப்பு ஒன்று இணைந்து இந்தச் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் வாணிவிலாஸ் பகுதியில் இன்று காலை இந்தத் திடீர் 'பாராட்டு' சோதனை நடைபெற்றது. நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில், சார்பு ஆய்வாளர் செல்வ ஹரிஹரசுதன் மற்றும் போக்குவரத்து போலீசார் இந்தப் பணியில் ஈடுபட்டனர். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனச் சோதனையின் போது, தலைக்கவசம் அணிந்து வந்தவர்களைப் போலீசார் வழிமறித்து, அபராதம் விதிக்காமல் அவர்களுக்கு இனிப்பு வழங்கி, "உங்கள் பாதுகாப்பு எங்கள் மகிழ்ச்சி" என்ற வாசகம் அடங்கிய வாழ்த்து அட்டையை வழங்கினர். சீட் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுநர்களுக்கும் இதே போன்ற பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. திடீரென போலீசார் வண்டியை நிறுத்தச் சொன்னதும் பதற்றமடைந்த வாகன ஓட்டிகள், கையில் இனிப்பைக் கொடுத்ததும் நெகிழ்ச்சியுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
இது குறித்துப் பேசிய போக்குவரத்து ஆய்வாளர் பழனிச்சாமி, "விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. விதிகளை மதிப்பவர்களைப் பாராட்டுவதன் மூலம், மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். உயிரிழப்புகளைத் தடுக்கத் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் மிக அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்." திண்டுக்கல் போலீசாரின் இந்த ஆக்கப்பூர்வமான செயல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!