by Muthukamatchi on | 2025-03-16 10:13 PM
திண்டுக்கல் அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது_*
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பொன்னுமாந்துறை அருகே ஆலங்குளம் குளக்கரையில் பதுங்கி கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய மகேந்திரன் (எ) பானை(24), சிவா(33), டேவிட்பொற்செழியன்(28), சின்னையாபாபு (எ)பாபு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து கத்தி உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்