| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

காவலர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-12-30 03:06 PM

Share:


காவலர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

சென்னை மாநகரக் காவல் ஆணையரால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட யூடியூபர் வாராகிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் காவல் துறைக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.பல்வேறு புகார்களின் அடிப்படையில் யூடியூபர் வாராகியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தனது கணவரை விடுவிக்கக் கோரியும் வாராகியின் மனைவி நீலிமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வாராகி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அவருக்கு 3 மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், வாராகியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு குறித்து 12 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்கத் தமிழக காவல் துறைக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.இந்த வழக்கின் விசாரணையின் போது, குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றம் மிக முக்கியமான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. எந்தவொரு தனிநபர் மீதும் உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கும் காவல் அதிகாரிகள் மீது அரசு உடனடியாகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரைச் சிறையில் அடைப்பதை நீதிமன்றம் அனுமதிக்காது.குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்கும் முறையைச் சீரமைக்கவும், தவறான கைதுகளைத் தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சமீபகாலமாக யூடியூபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக அமையும் எனச் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.வாராகிக்கு ஜாமின் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விரைவில் சிறையிலிருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 வாரங்களுக்குப் பிறகு காவல் துறை அளிக்கும் பதிலைப் பொறுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment