by Vignesh Perumal on | 2025-04-07 08:04 PM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பணவீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காயங்களில் பிரதமர் மோடி உப்பு தூவியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விலை உயர்வு ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சிலிண்டர் விலை ரூ.503ல் இருந்து ரூ.553 ஆக உயரும்.
இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.