| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

சிவில் சப்ளை குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அறிவிப்பு...!!!

by Muthukamatchi on | 2025-04-07 02:49 PM

Share:


சிவில் சப்ளை குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அறிவிப்பு...!!!

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் மாதந்தோறும் நடத்தப்படும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்கூட்டம் (Civil Supplies Grievance meeting)  மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் இம்மாதம்  12.04.2025 – அன்று நடைபெற உள்ளது.இதன்படி, தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 2025–ஆம் மாதத்தில் 12.04.2025 அன்று     பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடத்திட தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் விவரம் பின்வருமாறு:


வ.எண்

வட்டம்முகாம் நடக்கும் கிராமம்கடை எண்முகாம் நடக்கும் இடம்

மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்படும் துணை ஆட்சியர்கள்

1பெரியகுளம்

வடுகபட்டி கிராமம்,

23BP003PN

23BP028PN

நியாய விலைக்கடை வடுகபட்டி கிராமம்

திரு.ரஜத்பீடன், இ.ஆ.ப.,
சார்ஆட்சியர், பெரியகுளம்.

2தேனி

ஊஞ்சாம்பட்டி கிராமம்

23AP012PN

23AP038PN

நியாயவிலைக்கடை, ஊஞ்சாம்பட்டி கிராமம்

திரு.ப.நேரு

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர்,  தேனி.
3ஆண்டிபட்டி

வாலிப்பாறை கிராமம்

23CB019PN

நியாயவிலைக் கடை, வாலிப்பாறை கிராமம்

திரு.மு.கதிர்வேல்

உதவிஆணையர் (கலால்)  (பொதேனி.

4

உத்தமபாளையம்

கருநாக்க முத்தன்பட்டி கிராமம்

23DE023PN

23DW002PN

நியாய விலைக்கடை கருநாக்க முத்தன்பட்டி

திரு.மு.செய்யதுமுகம்மது

வருவாய் கோட்டாட்சியர், உத்தமபாளையம். 

5போடிநாயக்கனூர்

காமராஜபுரம் கிராமம்

23EP011PN

நியாய விலைக்கடை, காமராஜபுரம் கிராமம்

திருமதி. ந.மாரிச்செல்வி

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தேனி. 


 இக்குறைதீர் முகாமிலபொதுமக்கள் பொது விநியோக  கடைகள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு செய்யலாம். பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் நியாய விலைக்கடை நடத்தும் நிறுவன அலுவலர்களுக்கு மனு மூலமும் தெரிவிக்கலாம். முன்கூட்டியே பெறப்படும் புகார்கள் மற்றும் குறைபாடுகள் வகைபாடு வாரியாக பிரிக்கப்பட்டு உடனுக்குடன் அவை தீர்வு செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முகாம் நாள் அன்று பொது மக்களுக்கு நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். மேலும், முகாம் நாள் அன்று பெறப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும். எனவே, பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment