by Vignesh Perumal on | 2025-04-07 01:06 PM
எவிடன்ஸ்
"சீமான் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும்" என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு டிஐஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு இடையே நிலவி வருகிறது. திருச்சி எஸ்.பி.யாக இருந்தபோது வருண்குமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்ததை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், தன்னையும் தனது குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சித்ததாக சீமான் மீது வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 7, 2025) விசாரணைக்கு வந்தபோது, சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!