| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

வடநாட்டு இளைஞர்களுக்கு, 'செக்' வைத்த தமிழ்நாடு போலீஸ்...! என்ன நடந்தது தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-03 12:13 PM

Share:


வடநாட்டு இளைஞர்களுக்கு, 'செக்' வைத்த தமிழ்நாடு போலீஸ்...! என்ன நடந்தது தெரியுமா...?

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்த்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் புதிய கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் மீது தவறான கண்ணோட்டம் இருப்பதாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அந்த எட்டு நபர்கள் மீது புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, முகமதுமிராட்அலி(32), முகமது அப்துல்லா(28), முகமதுஆரிப்கோசன் (29), முகமதுமினருல்ஹக்(18), முகமதுஷகில்அலி(20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம்(26) மற்றும் அவல்ஷேக்(22) ஆகிய எட்டு பேர் போலியான ஆதார் அட்டை பெற்று, எந்த ஒரு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது அம்பலமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் அந்த எட்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment