by Vignesh Perumal on | 2025-04-03 12:13 PM
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்த்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் புதிய கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் மீது தவறான கண்ணோட்டம் இருப்பதாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அந்த எட்டு நபர்கள் மீது புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, முகமதுமிராட்அலி(32), முகமது அப்துல்லா(28), முகமதுஆரிப்கோசன் (29), முகமதுமினருல்ஹக்(18), முகமதுஷகில்அலி(20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம்(26) மற்றும் அவல்ஷேக்(22) ஆகிய எட்டு பேர் போலியான ஆதார் அட்டை பெற்று, எந்த ஒரு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது அம்பலமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் அந்த எட்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!