by Vignesh Perumal on | 2025-04-02 08:53 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினசரி அன்னதான திட்டம் தினமும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். அன்னதானத்தில் உணவருந்த வரிசையில் காத்திருக்கும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இக்கோவிலில் கோடை காலம் மற்றும் விடுமுறை காலத்தை முன்னிட்டும். பக்தர்கள் கூட்டத்தை கருதியும் இன்று 01.04.2025 முதல் 10.06.2025 வரை கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கல்யாண மண்டபத்தில் சிற்றுண்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. இது காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு கட்டணமில்லா சிற்றுண்டி தயிர் சாதம், புளியோதரை மற்றும் காய்கறி கூ.ட்டு உபயதாரர் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 3,000 பக்தர்கள் மதிய வேளையில் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் அன்னதானம் வழங்கி துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!