by aadhavan on | 2025-04-02 06:39 PM
கூடலூரில் பங்குனி பொங்கல் விழா
தேனி மாவட்டம் கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.2 நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாளில், பெண்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில், கூடலூர் நல்ல தண்ணீர் கிணறு எனப்படும் ராஜா கிணற்றுக்கு சென்று கரகம் ஜோடித்து எடுத்து வந்தனர்.பெண்கள் மாவிளக்கு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ சக்தி காளியம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
கூடலூர் சி.எம். ஆதவன் தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!