by Vignesh Perumal on | 2025-04-02 03:41 PM
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மன் குளம் அருகே நெல் உமி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி விபத்து குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.