| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

ராமநவமி சிறப்பு வழிபாடு...! பிரதமர் மோடி வருகை...! எங்கு தெரியுமா..?

by Vignesh Perumal on | 2025-04-02 07:28 AM

Share:


ராமநவமி சிறப்பு வழிபாடு...! பிரதமர் மோடி வருகை...! எங்கு தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் விழா பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராமநவமியான அன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

அதைத்தொடர்ந்து, திறப்பு விழா நிகழ்ச்சி கூட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக விழா பந்தல், மேடை அமைக்க பிரம்மாண்ட இரும்பு சட்டங்கள்,வெப்ப சலனத்தை தாங்கும் கூரைகள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி சிறப்பு விமானத்தில் மதுரை புறப்படுகிறார். அதன்பின் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வருகிறார். அங்கிருந்து காரில் ராமேஸ்வரம் வருகிறார். இதற்காக மண்டபம் ஹெலிபேட் தளத்தில் சிமென்ட் கலவை பூசி புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.


பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி எதிரிகள் ஊடுருவலை தடுக்க சில நாட்களாக பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து கப்பலில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment