by Muthukamatchi on | 2025-04-01 08:27 PM
திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய வாலிபர் கைது, 11 கிலோ காட்டுப்பன்றி கறி, வெட்டுக்கத்தி பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை வன சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த
போது செட்டியபட்டி, வேளாங்கண்ணிபுரத்தை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் ஆல்வின்எடிசன்(29) என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாடி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி, 1 வெட்டுக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆல்வின்எடிசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.