by Vignesh Perumal on | 2025-04-01 05:07 PM
நூறுநாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி பாக்கி 4000 கோடியை ஒன்றிய அரசே உடனே வழங்கிடு என பல்வேறு கோரிக்கையை முன் வைத்து, தமிழ் மாநில விவசாய தொழிளாளர் சங்கம் சார்பில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியக்குழு சார்பாக வி. தொ. ச மாவட்ட செயலாளர் தோழர் N. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தேவாரம் வ. உ. சி மைதானத்தில் இருந்து பேரணியாக வந்து தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தோழர் வீ.பாண்டி கண்டன உரையாற்றினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஈ. முத்துலட்சுமி, வி. ச ஒன்றிய செயலாளர் தோழர் ரா. ஈஸ்வரன், ஒன்றிய தலைவர் தோழர். ரா. சதீஸ் மற்றும் பெருமளவில் அனைத்து கிளைகளில் இருந்தும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!