| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-04-01 07:26 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

அருள்மிகு கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அமைந்துள்ள கற்றளி கோவிலாகும்.

வரலாறு: முதலாம் ஆதித்திய சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நன்கொடை வழங்கிய கல்வெட்டு இக்கோவிலின் மகாமண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும் இக்கோவில் சற்று தொன்மை மிக்கதும் பாண்டியர்கள் கலைப்பாணியில் எழுப்பப்பட்டதும் ஆகும். கோனாடு மற்றும் பாண்டிநாட்டை ஒட்டிய பகுதிகளில் முதலாம் ஆதித்திய சோழனின் ஆட்சி பரவிய காலமான கி.பி 880 ஆம் ஆண்டிற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்கலாம்.


முதலாம் ஆதித்திய சோழன் (கி.பி. (870 – 907) காலத்தில் விரிவாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மகாமண்டபம் முதலாம் ஆதித்திய சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment