| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு..! பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் வெளியீடு...!

by Vignesh Perumal on | 2025-03-31 07:20 AM

Share:


மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு..! பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் வெளியீடு...!

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. 


வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும்" என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment