by Vignesh Perumal on | 2025-03-30 03:57 PM
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மேல தெருவில் அமைந்துள்ள கம்மவார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை ( யுகாதி) முன்னிட்டு பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. யுகாதி வருடப் பிறப்பான நேற்று பெருமாள் கோவிலில் பக்தர்கள் முன்னிலையில் புது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு பூஜை தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த வருடம் நாட்டில் நல்ல மழை பெய்து, மக்கள் வளமுடனும், நலமுடனும் இருக்க பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்