by Vignesh Perumal on | 2025-03-30 03:57 PM
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மேல தெருவில் அமைந்துள்ள கம்மவார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை ( யுகாதி) முன்னிட்டு பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. யுகாதி வருடப் பிறப்பான நேற்று பெருமாள் கோவிலில் பக்தர்கள் முன்னிலையில் புது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு பூஜை தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த வருடம் நாட்டில் நல்ல மழை பெய்து, மக்கள் வளமுடனும், நலமுடனும் இருக்க பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!