| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பேரூராட்சி நகராட்சியாக மாற்றம்...! எந்த பேரூராட்சி தெரியுமா..?

by Vignesh Perumal on | 2025-03-30 02:00 PM

Share:


பேரூராட்சி நகராட்சியாக மாற்றம்...! எந்த பேரூராட்சி தெரியுமா..?

கன்னியாகுமரி, அரூர் உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுதொடர்பாக செய்திக் குறிப்பு விவரம் வருமாறு : "தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் அதிகரித்தது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் உருவாகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன.


இதனால், தற்போது கன்னியாகுமரி, போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சியானது என்று தமிழக அரசு ஆணை வெளியானது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment