by Vignesh Perumal on | 2025-03-30 12:58 PM
தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் 22,500 பேர் போலி ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வரி ஏய்ப்பு, வரி திரும்ப பெறும் மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.