by Satheesh on | 2025-03-29 03:39 PM
தேனி : போடிநாயக்கனூரில் திமுக சார்பாக, 100 நாட்கள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ₹ 4000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி போடிநாயக்கனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜீப் கான், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், காளி , ராமசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர் மற்றும் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். சில்லமரத்துப்பட்டி மற்றும் நாகலாபுரம் போன்ற கிராமங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
V. P. சுதாகர். போடி