by Muthukamatchi on | 2025-03-29 03:14 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி சேர்ந்த போலீஸ்காரர் முத்துக்குமார் உசிலம்பட்டியில் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுபான கடை அருகே மர்ம கு கும்பல் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினர். மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி தேனி மாவட்டம் மலை கிராமங்களில் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருசநாடு மலை கிராமங்களில் போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிர படுத்தினர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பொன்வண்ணன் என்ற குற்றவாளியை கம்பம் வனப்பகுதியில் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா நிருபர் மீனாட்சிசுந்தர்