by Muthukamatchi on | 2025-03-29 12:56 PM
தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுளம் தெற்கு ஒன்றியம் ஜெயமங்கலத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசை கண்டித்து பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், ஜெயமங்கலம் கிளை பொறுப்பாளர் கருப்பையா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஒரு நாள் வேலை வாய்ப்புக்கான நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் நகரச் செயலாளர் இலியாஸ் தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டி போடி நகர செயலாளர் புருஷோத்தமன் பெரியகுளம் தெற்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் லட்சுமிபிரியா வீரபத்திரன், மாவட்ட மீனவர் அணி துணை தலைவர் வேல்முருகன் வைகை அணை கிளை செயலாளர் சந்தானம் ஜெயமங்கலம் காந்தி நகர் காலனி தங்கப் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!