by Vignesh Perumal on | 2025-03-29 11:43 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சி குடியிருப்புகளுக்கு, வைகைஅணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியை சுற்றிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
இருந்த போதிலும், நேற்று விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் மண் படிந்து சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதுமட்டுமின்றி, அம்மக்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட உடல் சார்ந்த நோய்கள் பருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, முதலக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!