by Vignesh Perumal on | 2025-03-29 11:43 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சி குடியிருப்புகளுக்கு, வைகைஅணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியை சுற்றிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
இருந்த போதிலும், நேற்று விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் மண் படிந்து சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதுமட்டுமின்றி, அம்மக்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட உடல் சார்ந்த நோய்கள் பருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, முதலக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!