by Vignesh Perumal on | 2025-03-28 11:42 PM
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நம்பர் பிளேட் இல்லாத இரண்டு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, போக்குவரத்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். குறிப்பாக, நாகல் நகர் ரவுண்டானா பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் டூவீலரை ஓட்டியது, டூவீலர்களை வேகமாக ஓட்டியது,லைசென்ஸ் இல்லாத சிறார்கள் என பலர் காவல்துறையிடம் சிக்கினர்.
காவல்துறையினர் அவர்களிடமிருந்து டூவீலர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். சிக்கிய வாலிபர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.