by Vignesh Perumal on | 2025-03-28 11:30 PM
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்கிறது.
சிஎஸ்கேவில் நாதன் எல்லிஸுக்குப் பதில் பிளேயிங் லெவனில் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபியில் புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.