by Muthukamatchi on | 2025-03-28 09:19 PM
கொடைக்கானலில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை, ரூ.1,20,000 அபராதம்
திண்டுக்கல், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த கிஷோர்(22) என்பவரை கொடைக்கானல் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் கிஷோருக்கு ஆயுள் தண்டையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1,20,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்