by Muthukamatchi on | 2025-03-28 03:44 PM
சோழவந்தான் பிரளய நாத சிவன் திருக்கோவில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பங்குனி மாத பிரதோஷத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால் தயிர் நெய் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மஞ்சள் வஸ்திரம் கொண்டைக்கடலை மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்காரங்களால் சிறப்பு அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஆலய செயல் அலுவலர் இளமதி,கணக்கர் பூபதி, பாஜக மாநில விவசாய அணிதுணைத் தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில், தாளாளர் மருது பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!