| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

சட்டசபையில் அமளி -அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் :

by Satheesh on | 2025-03-28 01:42 PM

Share:


சட்டசபையில் அமளி -அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் :

மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்.கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் - அவை முன்னவர் துரைமுருகன்.பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது - சபாநாயகர் அப்பாவு.கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம், அமளி.கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு.சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, பேரவை காவலர்கள் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்.அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்.சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு சபாநாயகர் இருக்கை முன்பு நின்று முழக்கமிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம். வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இன்று ஒரு நாள் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் உத்தரவு.

N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment