by Vignesh Perumal on | 2025-03-28 08:14 AM
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பொன்னுமாந்துறை அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த பரமதேவர் (70) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.