by Vignesh Perumal on | 2025-03-27 03:21 PM
கோயிலாக நினைக்கும் அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கே இடம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்: "அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் மரியாதையாக விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்