by Vignesh Perumal on | 2025-03-27 11:55 AM
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சனை காரணமாக மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவர் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது குடும்பத்தார்கள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது போன்ற விபரீத முடிவு யாரும் எடுக்க வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் எது என்பதையும் புரிந்து செயல்பட வேண்டுகோள் விடுப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இச்சூழலில், இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.