by Muthukamatchi on | 2025-03-26 07:56 PM
இன்று 10 வது நாளாக ராட்டம்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலருடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேச்சுவார்த்தை!தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 1500 ல் இருந்து 3000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
கடந்த 17ஆம் தேதி மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் காத்திருப்பு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடங்கினர்.இன்று 10 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.( தொடர்புக்கு 8675946482, பொதுச் செயலாளர்- மாற்றுத்திறனாளிகள் அமைப்பு)