| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

மின்சார இரயிலில் மாற்றம்...! அது உங்களுக்கு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-03-24 03:53 PM

Share:


மின்சார இரயிலில் மாற்றம்...! அது உங்களுக்கு தெரியுமா...?

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேக்காக 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதன்பேரில், முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு பிப்ரவரி 3வது வாரத்தில் வழங்கப்பட்டது. 


அதாவது, 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேர், நின்றுகொண்டு 3,798 பேர் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும், கட்டண விவரங்கள் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment