| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

போஸ்டரால் பரபரப்பு...! அச்சத்தில் அதிகாரிகள்...! காரணம் 'இதுதான்'..!

by Vignesh Perumal on | 2025-03-23 06:55 PM

Share:


போஸ்டரால் பரபரப்பு...! அச்சத்தில் அதிகாரிகள்...! காரணம் 'இதுதான்'..!

கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக மாநிலத்தில் அண்ணாமலை மது ஊழல் தொடர்பாக பல்வேறு எதிர்வினை தகவல் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் அன்று அவர் கூறியதாவது, 'தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களுடன் பல பிரச்னைகள் உள்ளன. கேரளா உடன் முல்லை பெரியாறு பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. பேபி அணையை இன்னும் சீரமைக்க முடியாமல் தவிக்கிறோம். இதனால், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் செண்பகவள்ளி அணையை சரிசெய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தும் சரிசெய்யாமல் உள்ளது. இதை சரிசெய்யாததால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரச்னை உள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், மனிதக் கழிவுகள், மிருகக் கழிவுகள் எடுத்து வரப்பட்டு, தமிழகத்தில் கொட்டப்படுகின்றன' என்று தெரிவித்தார். 


அதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம், ``சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. நீங்கள் தான் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். அனைவரும் ஜெயலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் நகர் பகுதியில் ஓட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment