| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பக்தர்களுக்கு வெறிநாய் கடி இலவசம்.....????

by Muthukamatchi on | 2025-03-23 06:50 PM

Share:


பக்தர்களுக்கு வெறிநாய் கடி இலவசம்.....????


தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகனை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பழனி நகராட்சி சார்பில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்விதமான நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என்று புகார் பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக தெரு நாய்கள் வெறி நாய்கள் பக்தர்களை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது பழனியில் நேற்று ஒரே நாளில் 15க்கு மேற்பட்டோரை   வெறி நாய் தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது.. பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரு நாய் மற்றும், வெறி நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் பழனி நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வெறி நாய் கடி இலவசம் வாருங்கள் வரவேற்கிறோம்.

நிருபர்கள் பாலாஜி ,கதிரேசன் பழனி 


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment