by Muthukamatchi on | 2025-03-23 06:24 PM
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
தேனி மாவட்டம், மார்ச் 22-ஆம் தேதி தேவதானப்பட்டி பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,
கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களான (செ. நவீன் பாண்டியன், வீ. பாபுக்குமார்,
சி. ஸ்ரீஹரிகுமார், ரா. விக்னேஸ்வரன், சு. திருமேனிநாதன், மு. ஜா.லோகேஸ்வரன், செ. சந்தோஷ் )சார்பாக கிராமப்புற அனுபவ பயிற்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மாணவர்கள் தண்ணீர் சேமிக்கும் முறைகள்,
சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை பற்றி கூறினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் கழிவு நீரை சுத்தம் செய்யும் செய்முறையை செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் சார்பாக கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிராம மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு கூறி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!