by Muthukamatchi on | 2025-03-23 06:24 PM
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
தேனி மாவட்டம், மார்ச் 22-ஆம் தேதி தேவதானப்பட்டி பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,
கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களான (செ. நவீன் பாண்டியன், வீ. பாபுக்குமார்,
சி. ஸ்ரீஹரிகுமார், ரா. விக்னேஸ்வரன், சு. திருமேனிநாதன், மு. ஜா.லோகேஸ்வரன், செ. சந்தோஷ் )சார்பாக கிராமப்புற அனுபவ பயிற்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மாணவர்கள் தண்ணீர் சேமிக்கும் முறைகள்,
சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை பற்றி கூறினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் கழிவு நீரை சுத்தம் செய்யும் செய்முறையை செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் சார்பாக கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிராம மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு கூறி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!