| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கிணற்றில் விழுந்த பேரன், பேத்தி..! பாட்டி செய்த செயல்...! மூவரும் பலி..!

by Vignesh Perumal on | 2026-04-04 02:56 PM

Share:


கிணற்றில் விழுந்த பேரன், பேத்தி..!  பாட்டி செய்த செயல்...! மூவரும் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே துணி துவைக்கச் சென்றபோது கிணற்றில் விழுந்த பேரன், பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.  

மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (65), இவரது பேரன் தனுஷ் (13) மற்றும் பேத்தி தனுஸ்ரீ (11) இன்று மதியம் சாந்தி தனது வீட்டின் அருகிலுள்ள விவசாயக் கிணற்றிற்குத் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். அவருடன் விளையாடுவதற்காகப் பேரன் தனுஷும், பேத்தி தனுஸ்ரீயும் உடன் சென்றுள்ளனர். 

கிணற்றின் கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாகத் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.

கிணற்றில் விழுந்த குழந்தைகள் இருவரும் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி சாந்தி, அவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில் பதற்றமடைந்துள்ளார். குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், 65 வயதான சாந்தியும் உடனடியாகக் கிணற்றுக்குள் குதித்துள்ளார். 

துரதிர்ஷ்டவசமாக, கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததாலும், பாட்டிக்கும் முறையான நீச்சல் தெரியாததாலும் மூவருமே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீண்ட நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றடிக்குச் சென்று பார்த்தனர். அங்குத் துணிகள் மட்டும் கரையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். 

தகவல் அறிந்த மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சாந்தி, தனுஷ் மற்றும் தனுஸ்ரீ ஆகிய மூவரின் சடலங்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சிலாவட்டம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 





நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment