by Muthukamatchi on | 2025-03-19 08:57 PM
திண்டுக்கல் அருகே 3 ஆம்னி வேன்களில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது, 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்புஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் கொட்டபட்டி பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக வந்த 3 ஆம்னி வேன்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன்அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் 3 ஆம்னி வேன்களில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற செல்வமணி(26), முருகபாண்டி(24), அருண்பாண்டியன்(24), வெங்கட்ராமன்(29 ஆகிய 4 பேரைகைது செய்து அவர்களிடமிருந்து 2500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.